வியாழன், 18 நவம்பர், 2021

அண்ணன்

ஒளவை போல் ஆனாலும் ஆவேன்
உன்னை அனாதையாய் 
ஆக்க மாட்டேன்

ஊரிலுள்ள உறவினருக்கு
நான் செல்லப் பிள்ளை
எனக்கோ 
நீ தான் செல்லப்பிள்ளை

பிரிக்க முடியா சொந்தம்
மறக்க முடியா பந்தம்
தவிர்க்க முடியா உயிர்
எல்லாமே நீ மட்டுமே...

உன்னைக் கண்டதும்
ஓடி ஒளிந்த 
என் கண்களும் கால்களும்
உன்னைக் 
காணவேண்டுமெனத்
தவமாய் தவமிருக்கின்றன.

                     -இரா.சேதுக்கரசி

1 கருத்து: