திங்கள், 22 நவம்பர், 2021

நம்பிக்கையுடன் ஒரு கவிதை

 என் வாழ்வில் ஒரு நாள் சிரிப்பு

பல நாள் அழுகை

இதுதான் என் வாழ்க்கையாயெனச் சிந்தித்தேன்.

எல்லாம் விதியென மனதைத் தேற்றினேன்

என் வாழ்வில் எவ்வளவோ ஏமாற்றங்கள்

எவ்வளவோ கஷ்டம். - என்னைக்

குப்பையெனத் தூக்கி எரிந்த்தார்கள்

என் வாழ்வு மாறுமா? மாறாதா?

இப்படியாய் தினமும் பயணிக்கிறேன்.

 என் வாழ்க்கை  நிச்சயம்மாறுமென

என் மனம் சொல்கின்றது.

நிச்சயம் மாறும்...

அந்தக் கடவுள் மாற்றுவாரென நம்பி

வலிகளுடன் வாழ்க்கையைத் தொடர்கிறேன்.

                                                     -பா.மோனிஷா 


2 கருத்துகள்: