அரவணைப்பில் தந்தையாக
அன்பில் அன்னையாக
அறிவுறுத்தும் ஆசானாக
மனதோடு பேசும் நண்பனாக
பல முகங்களில் உன்னைப் பார்க்கிறேன்.
நீ வாழ்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளுகிறேன்.
- மணிமேகலை
அரவணைப்பில் தந்தையாக
அன்பில் அன்னையாக
அறிவுறுத்தும் ஆசானாக
மனதோடு பேசும் நண்பனாக
பல முகங்களில் உன்னைப் பார்க்கிறேன்.
நீ வாழ்கையை அணுகும் முறையினில்
நான் வாழ்க்கையைக் கற்றுக் கொள்ளுகிறேன்.
- மணிமேகலை
இன்பத்திலும் துன்பத்திலும்
நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியவை
இந்த நிமுடம்கூட நிரந்தரமில்லை
- மணிமேகலை
கடவுள் கொடுத்த அழகான வரங்கள் இரண்டு
ஒன்று இயற்கை
மற்றொன்று பெண்
இந்த இரண்டையும் நீ
எப்படி சிதைத்தாலும்
அது உனக்கு நன்மைச் செய்கிறது.
இதை சிதைக்க எப்படிதான் மனம் வருகிறதோ உனக்கு!
-ராஜதுரை
எனக்காகக் கடவுளால் உருவாக்கப்பட்ட செல்லம் நீ
என்னை யாரிடமும் விட்டுக் கொடுக்காத தங்கம் நீ
நான் உனக்கு அக்காவாக இருந்தாலும் - நீ
எனக்கு ஒரு அம்மாவாக இருந்தாய்
நாம் சண்டை போடாத நாளே இல்லை
நாம் விளையாடாத நாளே யிருந்ததுமில்லை
இருவருக்கும் ஆயிரம் சண்டைகள் வந்தாலும்
அடுத்த நொடியே காணாமல் போய்விடும்
உன் சிரிப்பில் நான் மகிழ்கிறேன்
உன்னை விட்டுச் செல்ல மாட்டேன் என்றும்
- ஸ்.லீனட் ஜெபக்குமாரி
என் வாழ்வில் ஒரு நாள் சிரிப்பு
பல நாள் அழுகை
இதுதான் என் வாழ்க்கையாயெனச் சிந்தித்தேன்.
எல்லாம் விதியென மனதைத் தேற்றினேன்
என் வாழ்வில் எவ்வளவோ ஏமாற்றங்கள்
எவ்வளவோ கஷ்டம். - என்னைக்
குப்பையெனத் தூக்கி எரிந்த்தார்கள்
என் வாழ்வு மாறுமா? மாறாதா?
இப்படியாய் தினமும் பயணிக்கிறேன்.
என் வாழ்க்கை நிச்சயம்மாறுமென
என் மனம் சொல்கின்றது.
நிச்சயம் மாறும்...
அந்தக் கடவுள் மாற்றுவாரென நம்பி
வலிகளுடன் வாழ்க்கையைத் தொடர்கிறேன்.
-பா.மோனிஷா
உன்னைப் பார்த்தவுடன் என்னுள்ளம் பரவசமடைந்தது
உன் அழகினில் என் ஆணவம் அழிந்தது
காந்தத்தன்மை கொண்ட உனது இருவிழிகள்
என் இதயத்தைக் கவர்ந்தது.
அடி வெண்னிலவு முகம் கொண்டவளே!
உன்னை அடைய கழுகு போல் காத்திருக்கிறேன்
நீயோ பறவையாய் மாறி பறந்துவிட்டாயே!
- பா. பாலநாகராஜ்
தேவை இல்லாமல் பேசுவாள் அவள் - ஆனால்
தேவைக்காக மட்டும் ஒருபோதும் பேச மாட்டாள்!
காரணமே இல்லாமல் சண்டை போடுவாள் -ஆனால்
சண்டைக்காக காரணம் தேட மாட்டாள்- அவள்
சண்டையிட்ட அடுத்த நொடியே
இப்போ நீ என்கூட பேசுவியா? மாட்டியா?
என்றும் முழு உரிமையோடு கேட்பாள்
அந்த நிமிடம் அந்த அரை லூசுவை ரசிக்க
முடியுமே தவிர தவிர்க்க முடியாது...
-வெ.தினேஷ்குமார்
உன் கால்கள் ஓரிடத்தில் நிற்காமல் ஓடுகிறது!
கல் முட்களைக் கடந்து செல்கிறது!
என் கண்முன் செல்கிறாய் - ஆனால்
கட்டியணைக்க முடியவில்லை
கால்வாய் ஓரத்தில் காதல் செய்கிறேன்
நவம்பர் மாதத்தில் பிறந்தவளை!
-ம.காவியச்செல்வன்
சன்னல் ஓரத்தில் சாய்ந்தபடி
உன் அழகில் வீழ்ந்தேனடி
தினமும் ரசித்தேனடி
பச்சை நிற போர்வைப் போர்த்த
என் பார்வையைக் கொன்றாயடி
காலையில் கண் குளிர வைத்தாயடி
கல்லூரிச் செல்லும் வேளையில்
இருபது அடி உயரத்தில்
யார் புகை பிடிப்பது? என எண்ணி வியந்தேன்!
அது வேறு யாருமில்லை
மலை தான்.
மலையும்கூட போதைக்கு அடிமையாகுமென
நினைத்தேன்!
பிறகுதான் தெரிந்தது
போதையைப் பயன்படுத்தியது மலை அல்ல
மலைதான் எனக்குப் போதை ஏற்றியதென்று!
- பால்பாண்டி
என் தனிமையை
உன்னிடம் என்னால்
அறிமுகம் செய்ய முடியவில்லை
ஏனோ அந்நியர்களை
அதற்கு அறவே பிடிப்பதில்லை.
நானும் நீயும் சந்திக்கும்
இந்த நொடியில் இங்கில்லா
நம் தனிமைகள் வேறு எங்கோ
சந்தித்துக் கொள்ளலாம்.
உனக்கு உன் தனிமை
எனக்கு என் தனிமை
தனிமையின் பெருங்கொடுமை
அதைத் தனியாகவே
அனுபவிக்க வேண்டும் என்பதுதான்.
தனியாகவே நிற்க வேண்டி இருக்கிறது
பெருங்கூட்டத்தின் நடுவிலும்
வீடு திரும்ப அழும் குழந்தையாய்
காலைக் கட்டியபடி என் தனிமை.
அனைத்த விளக்கில் எரியும் இருளாய்
கவ்விச் சூழ்ந்த ஒரு தனிமைதான்
இந்தக் கவிதையையும்
எழுதிக் கொண்டிருக்கிறது.
-அருண்குமார்
அன்புத் தோழியே
கண்ணோடு கண் பார்த்துக் கொண்டோம்!
கையோடு கைக் கோர்த்துக் கொண்டோம்!
மனதில் உள்ளதை உரிமையுடன்
பகிர்ந்து கொண்டோம்!
காணக் கந்தேடுகிறது
மீண்டும் கிடைத்திடுமா? - நாம்
பழகிய அந்த அழகிய நாட்கள்!
ர.லட்சுமிபிரியா
புன்னகைத்துப் பாருங்கள்
நட்புகள் கிடைக்கும்!
பிரார்த்த்னைச் செய்யுங்கள்
நல்ல மனம் கிடைக்கும்!
நம்பிக்கை வையுங்கள்
வெற்றி கிடைக்கும்!
உண்மையாய் உறுதியோடு
உழைத்துப் பாருங்கள்
வாழ்க்கையில்
எல்லாமே கிடைக்கும்!
மு.பிரியதர்ஷினி
எங்கள் உறவு பல சண்டையில் ஆரம்பித்து
சமாதானத்தில் முடிதல் வேண்டும்
அவன் கோபத்தில் சண்டையிட்டாலும்
சமாதானப்படுத்துவதில் கெட்டிக்காரன்.
அவனும் நானும் வேறில்லை என்பேன்
அவனைப் பிரியக் கூடாதெனக் கடவுளிடம்
வரம் கேட்பேன்
அந்த வரத்தை தர மறுத்தால்
அந்தக் கடவுளையும் வெறுப்பேன்
ரா.வனிதா
மனிதர்கள் போர் போடுகிறார்கள்
மரத்தை அழிக்கிறார்கள்!
போர் போட ஐம்பதினாயிரம் எனில்
மரத்தை நட ஐம்பது ரூபாய்!
ஆற்றில் கலப்பது கழிவுநீர்!
அது ஏழைகளின் குடிநீர்!
பின் விடுகிறார்கள் கண்ணீர்!
மண்ணின் வளத்தைக் குறைப்பது பிளாஸ்டிக்
மக்காத குப்பை பிளாஸ்டிக்
அது இந்த மங்குனி மனிதர்களுக்குத் தெரியவில்லை
பிளாஸ்டிக் விஷம் என்று!
-காசிசுபாஷினி
நானும் உன்னைத் தேடினேன் நால்பக்கம் எங்கும்
இன்றேனோ உன்னை காணவில்லை
திடீரென இருள் சூழ்ந்த அறையில் ஒளி
அப்பொழுதுதான் தெரிந்தது
என்னிடம் கண்ணாம்பூச்சி விளையாடுகிறாய் என்று!
- ஐஸ்வர்யா
எடுக்கின்ற முடிவு எதுவாக இருந்தாலும் - அது
நேர்வழியாய் செல்ல வேண்டுமென்பாய்!
நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் - அது
பிள்ளைகளுக்குத் தெரியாக் கூடதென எண்ணுவாய்!
நான் குழந்தையாக இருக்கும்போது
என்னை அணைப்பாய்
சிறிது காலம் கழித்து என்னைத் துரத்துவாய்
நான் வெளிவுலகம் கற்றுக் கொள்ள!
நேரில் கண்ட கடவுள் நீதான்.
- வீணுப்பெருமாள்
மனிதா! நீ உன் வியர்வையைச் சிந்தி
விவசாயம் செய்தாய்
நான் உன் குடும்பத்தை வளம்பெறச் செய்தேன்
காட்டை அழித்தாய்
மழைப் பொய்த்து போனது
நான் ஒரு நெல்மணிக்காக உன் கண்களில்
கண்ணீரை வரவழைத்தேன்
ஆழ்துளைக் கிணற்றுக்காக பூமியில் துளையிட்டாய்- அது
உன் எதிர்கால சந்ததியினருக்குப் போடும்
பாதாள குழி என்று மறவாதே
மனிதா நீ என்னை அழித்தாய் என நினைத்தாயோ?
உன்னை நீயே அழித்துக் கொண்டிருக்கிறாயென
மறந்து விடாதே!
-வே. நிஹரிஹா
அனைத்து உயிர்களுக்கும்
உயிர் காற்றை அள்ளிக்கொடுக்கும் உன்னையே
அழிக்க நினைக்கும் இம்மூடர்களை
என்னவென்று கூறுவது?
இயற்கையாகவே நாங்கள் சுவாசிப்பதற்காக
உன் மூச்சுக் காற்றை அளிக்கிறாய் - மனிதனோ
உன்னை அழித்து செயற்கைக் காற்றைத் தேடுகிறான்!
வேரூன்றி முளைத்து வருபவள் நீ
வெயிலிலும் மழையிலும் உறுதியாக நின்று
எந்தத் துன்பத்திலும் மன உறுதி வேண்டுமென
எங்களுக்குப் பாடாம் புகட்டுகிறாய்
-சரண்யா
கடல் மணலைக் கூட எண்ணி விடலாம்
பெண்ணின் மனக் கவலைகளை எண்ண முடியாது
தனதாசைகளை ,மறைத்து
தன் குழந்தைகளின் ஆசைகளை
நிறைவேற்றத் துடிக்கும் உன்னதமான உயிர்!
-அமுதா
எத்துன்பத்தையும் ஏற்பாய்
கொடுக்கும் கொடுமைகளைச் சுமப்பாய்
எல்லா உயிர்களுக்கும் உயிர் கொடுப்பாய்
பொறுமையின் சிகரமாய் இருப்பாய்
உன்னை வனங்குகிறேன்.
-இந்துமதி
பெண்ணைத் தவறாக
தலைநிமிர்ந்து பார்த்தால்
தலையை வெட்டும் அந்த சட்டம்
எப்போதுதான் வருமோ? என் நாட்டில்.
என் நாட்டின் மக்கள் மீது தவறா?
நாட்டின் மீது தவறா?
கூண்டில் அடைத்த கிளி போல் வாழ்கின்றனர்
என் நாட்டு பெண்கள்!
அந்தக் கூண்டைத் தகர்க்கப் போவது
வருங்கால சட்டமா? சந்ததியா?
-ஆஷிபா
நான் அழுத போது
என்னை சிரிக்க வைத்த முகம்
என்றுமே என்னை
வெறுக்காத குணம்
தவறுகளை மன்னிக்கும் மனம்
அளவுகளே இல்லாத பாசம்
பாசத்தால் என்னை ஆளும் உறவு
-பெ.துர்காதேவி
தென்றலும் காற்றும்
தென்னை இலை கீற்றும்
குன்றும் மலையும்
குறுகிய வளைவும்
செவ்வாய் இதழும்
செந்தாமாரை மலரும்
அடர்ந்த காடும்
அடங்காத கடல் அலையும்
வர்ணிக்க வார்த்தை இல்லை
என் வர்ணன பூவுலகே
ரசித்திட எல்லை இல்லை
என் இயற்கை அன்னையே
- பெ.துர்காதேவி
முகத்தில் தெரியும் அழுகையும்
சிரிப்பையும் காண்பது உறவு.
அழுகைக்கும் சிரிப்பிற்கும்
காரணத்தைக் கண்டறிவது
நட்பு.
பி.கல்பனா
மழையில் நனைய ஆசை உண்டு
மறைத்து வைக்கும் அன்னை இங்கே!
வானில் பறக்க ஆசை உண்டு
கூண்டில் அடைக்கும் தந்தை இங்கே!
பெண்ணாய் பிரந்து விட்டதால் ஏனோ
சின்ன சுதந்திரம்கூட இல்லை!
நான் கேட்பது ஏனோ
சிறு சிறு ஆசைகள் தானே?
சிறிய சுதந்திரம் வேண்டுமெனக்கு
வாழும் வரை வீட்டுச் சிறை
வாழ்ந்த பிறகு கல்லில் அறை!
நா.கலைவாணி
அம்மா செல்லமா? அப்பா செல்லமா?
எனக் கேட்கும் ஏதாவது ஒரு தருணத்தில்
சொல்லியிருக்கலாம்
நான் அப்பா செல்லமென...
அன்று நானும் சொல்லவில்லை
ஆனாலும் என அப்பா கோபித்துக் கொள்ளவில்லை
காரணம் விட்டுக் கொடுப்பதையைக் கற்றுக் கொடுப்பவர்
கி.ஞானப்பிரியா
https://www.facebook.com/100003175641859/posts/pfbid0dk8td7LevkKr33pbr8t5kaooudL5HPtQYC9BYHmE7nRVLcrycq5PJ6HKPJhG8bjTl/?mibextid=NOb6eG