"வந்தடைந்தார் புதுமைப்பித்தன்"
முதலில் 5 நூல்கள் வேண்டுமெனத் தொடங்கி இறுதியாக 75 நூல்களை முன்பதிவு செய்தேன். பல்வேறு தளங்களில் புதுமைப்பித்தன் நூல் மலிவு விலை விளம்பரம் தென்பட்டாலும் முதலில் நண்பன் மூ.அய்யனார் அனுப்பிய குறுஞ்செய்தி வாயிலாகதான் அறிந்து கொண்டேன். இந்நூல்
கண்டிப்பாக மாணவர்களின் கரங்களில் கிடைக்க வேண்டுமென எண்ணினேன். ஊரடங்கு என்பதால் அனைத்து மாணவர்களையும் ஒருசேர காண முடியாமல் போய்விட்டது. இருப்பினும் புலனம் வாயிலாகத் தொடர்பு கொண்டு நூல் வாங்குவதற்கு மாணவச் செல்வங்களைத் திரட்டினேன்.
இனி மாணவர்களின் கரத்தில் புதுமைப்பித்தனைத் தொலைத்தால்தான் நிம்மதியான தூக்கம் வரும்.
அதுவரையும் கனவுகளில் புதுமைப்பித்தன் என்னைத் தொந்தரவு செய்துக் கொண்டேயிருப்பார்.
------------------------------------
நன்றிக்குரியோர்:
வீ.அரசு ஐயா
சீர் வாசகர் வட்டம்
தோழர் கவிஞர் தம்பி
தோழர் கவிஞர் தம்பி துணைவியர்
105 நன்கொடையாளர்கள்
நண்பன் அய்யனார்
-முனைவர் சே.முனியசாமி